நான் ஆசைப்பட்டும் படம் பண்ண முடியாத இரண்டு ஹீரோக்கள், ஒண்ணு விஜய், இன்னொன்று...:  சுந்தர் சி

  • IndiaGlitz, [Friday,November 11 2022]

நான் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டும் முடியாத இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள், அவர்களில் விஜய் ஒருவர் இன்னொருவர்.. என சுந்தர் சி நேற்று நடந்த திரைப்பட விழாவில் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிப்பில் உருவான ‘கலகத்தலைவன்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் அவர்களில் ஒருவராக இயக்குனர் சுந்தர் சி கலந்து கொண்டார்.

அவர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நான் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்ட இரண்டு ஹீரோக்களில் ஒருவர் விஜய், இன்னொருவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினுடன் படம் பண்ண ஒரு வாய்ப்பு வந்தது வந்தது. அந்த படம்தான் ’தீயாய் வேலை செய்யணும் குமாரு’. ஆனால் ஒருசில காரணங்களால் அந்த படத்தில் உதயநிதி நடிக்கவில்லை. ஆனாலும் அந்த படத்தை அவர் வேறொரு ஹீரோவுக்கு விட்டுக் கொடுத்தார். அந்த படம்தான் சூப்பர் ஹிட் ஆகியது என்று சுந்தர் சி கூறினார்.

மேலும் தற்போது தயாரிப்பாளர்கள் நிம்மதியாக படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான். அதற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More News

இரண்டு ஹீரோ படத்தில் நயன்தாரா? இயக்குனர் யார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது 'ஜவான்' உள்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்

ஜனனியை கதறி அழுவைத்த விக்ரமன் - அமுதவாணன்: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் திடீர் திடீர் என உணர்ச்சிவசப்படுவது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வாக இருக்கும் நிலையில் திடீரென ஜனனியை விக்ரமன் மற்றும் அமுதவாணன்

இந்த வார எலிமினேஷன்: டேஞ்சர் ஜோனில் இருக்கும் 3 போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நாமினேசன் பட்டியல் வெளியாகும் என்பதும், நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர்

பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுன் நகை கொள்ளை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல்

'என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள்': 'வாரிசு' இசை வெளியீட்டு விழா எப்போது?

 சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதே போன்று பிரமாண்டமாக 'வாரிசு'  படத்தின் ஆடியோ