நடிகர் கவின் குறித்து பரவி வரும் வதந்தி.. சுந்தர் சி தரப்பு அளித்த விளக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,February 20 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ’கலகலப்பு 3’ திரைப்படத்தில் நடிகர் கவின் நடிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி வரும் நிலையில் இது குறித்து சுந்தர் சி தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’கலகலப்பு’ திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டும், இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’கலகலப்பு 2’ 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இரண்டு படங்களும் நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ திரைப்படம் மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் ’கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் பரவியது. இதற்கான பணிகளையும் இயக்குனர் சுந்தர் சி தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’கலகலப்பு’ திரைப்படத்தில் சிவா மற்றும் விமல், ’கலகலப்பு 2’ திரைப்படத்தில் ஜீவா மற்றும் ஜெய் ஹீரோவாக நடித்த நிலையில் ’கலகலப்பு 3’ திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு செய்தி இன்று காலை முதல் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த செய்திக்கு சுந்தர் சி மறுப்பு தெரிவித்துள்ளார். ’கலகலப்பு 3’ படத்தில் கவின் நடிப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளார்.

More News

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்திய விவகாரம்..ஆர்கே செல்வமணி அறிக்கை..!

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்தி பேசிய முன்னாள் அதிமுக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி இது குறித்து கண்டனம்

ஓடிடி விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார்,

பாடலாசிரியர் சினேகன் அளித்த புகார்.. தமிழ் நடிகை அதிரடி கைது..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஷ்பு ஏன் அமைதியாக இருக்கிறார்? கூவத்தூர் விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் கேள்வி..!

அதிமுகவில் இருந்து விலகிய ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த

கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது: த்ரிஷாவின் பதிவு..!

கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது என்று நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.