சுனில் கவாஸ்கர் கொடுத்த ரூ.59 லட்சம் நிதியுதவி: ஒரு சுவாரஸ்ய கணக்கு

கடந்த சில நாட்களாக கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு கைகொடுக்கும் வகையில் தொழிலதிபர்கள், திரையுலக பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவர்கள் தனது பங்கிற்கு 59 லட்ச ரூபாய் பிரதமர் நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார். இதில் பிரதமர் நிவாரண நிதியாக ரூபாய் 35 லட்சமும் மகாராஷ்டிர மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 24 லட்சமும் கவாஸ்கர் வழங்கியுள்ளார்.

சுனில் கவாஸ்கர் வழங்கிய 35 லட்சம் மற்றும் 24 லட்சம் என மொத்தம் 59 லட்சத்தில் ஒரு சுவாரஸ்ய கணக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக விளையாடி 35 சதங்களை அடித்துள்ளார் என்பதால் பிரதமர் நிவாரண நிதிக்கு 35 லட்சம் அளித்துள்ளதாகவும், அதேபோல் மும்பை அணிக்காக விளையாடி 24 சதங்கள் அடித்துள்ளார் என்பதால் மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 24 லட்சம் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சுவாரஸ்ய கணக்கை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் கொரோனா வைரஸ்: நேற்றைவிட இன்று அதிகமானதால் பரபரப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துரை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகை த்ரிஷா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக தினமும் 50க்கும் மேல் உயர்ந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க சீனா எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன???

கொரோனா ஊரடங்கினால் சீனா அதிகாரிகள் பலரை நேரடியாக தொடர்பு கொள்ளமுடியாத நிலைமை இருந்துவந்தது

கொரோனா தடுப்பு நிதி: அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு வாரங்களாக எந்தவித சினிமா படப்பிடிப்பும் நடைபெறவில்லை

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஊரடங்கு உத்தரவு முடிய ஏழு நாட்களே உள்ளது