4 பாகங்களாக அடுத்தடுத்து உருவாக இருக்கும் சூப்பர்ஹிட் திகில் திரைப்படம்!

ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தின் பல பாகங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் தமிழ் திரையுலகை பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று பாகங்கள் மட்டுமே அதிகபட்சமாக வெளியாகும் என்பது தெரிந்ததே. ஆனால் தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திகில் திரைப்படம் ஒன்று நான்கு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’டிமான்டி காலனி’. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியானது.

அஜய் ஞானமுத்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், வெங்கி என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அருள்நிதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அருள்நிதி, ‘ டிமாண்டி காலனி’ திரைப்படம் அடுத்தடுத்து நான்கு பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் அதற்கான கதைகள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘டிமாண்டி காலனி’ அடுத்தடுத்து நான்கு பாகங்களாக வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

மீண்டும் இணையும் 'தோழா' கூட்டணி!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாகார்ஜுனா மற்றும் கார்த்தி இணைந்து 'தோழா'  என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி இணைந்துள்ள தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் முதல் படம்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இசையமைக்கும் முதல் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

விஜய்யின் 'வாரிசு' படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த தமன்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் தமன் தனது சமூக

இது உண்மையில்லை, ஆனா கேட்கவும் பாக்கவும் நல்லாயிருக்கு: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!

'இது உண்மை இல்லை ஆனால் கேட்கவும் பார்க்கவும் நல்லா இருக்கு' என பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பிரபல தமிழ் ஹீரோவுக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

பிரபல தமிழ் ஹீரோவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவருமான ஹரிஷ் கல்யாண் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.