பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் வின்னர்? புதிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

சற்று முன் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலையும் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவலையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரு ஆச்சரிய தகவலாக ’சூப்பர் சிங்கர் ஜூனியர் 3’ நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற அஜித், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கையால் விருது வாங்கிய ஆஜித், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும் இவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும், முன்னதாக திருச்சியை சேர்ந்த ஆரவ் மற்றும் கவின் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அது இல்லாமல் எப்படி 'வாடிவாசல்': ஜிவி பிரகாஷின் ஆச்சரிய தகவல்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான 'வாடிவாசல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது 

காதல் மனைவிக்கு கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழ் ஹீரோ!

தமிழ் ஹீரோ ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதல் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது 

அஜித்-சுதா கொங்காரா படம் குறித்து ஜிவி பிரகாஷின் அப்டேட்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தளபதி விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

விஜய்-வெற்றிமாறன் படம் குறித்து ஜிவி பிரகாஷ்

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் ஒரு படத்தையும் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தையும் அடுத்தடுத்து இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.