சூப்பர் சிங்கர் புகழ் முத்துச்சிற்பி பாடிய மனதை மயக்கும் பாடல்!

  • IndiaGlitz, [Saturday,December 18 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான முத்துச்சிற்பி பாடிய திரைப்பட பாடல் ஒன்று தற்போது மனதை மயக்கும் வகையில் அனைவரும் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் ’ரேணிகுண்டா’ படம் மூலம் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகிய ’ஐஸ்வர்யா முருகன்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலின் பெருமைகளை சொல்லும் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதன் வேறு பக்கத்தை காட்டும் படமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஒரு காதலால், காதலர்களின் குடும்பங்களில் என்னென்ன துன்பத்தை தருமென அதன் வலிகளை அழுத்தி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் மூன்றாவது பாடலான “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..” எனும் - மனதை உலுக்கும் காட்சியாக உருவான இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதலர்களின் பார்வையிலிருந்து விலகி, காதலால் இரு குடும்பத்தினர் படும் துயரங்களை வலி மிகுந்த வார்த்தைகளிலும் மனதை உருக்கும் இசையிலும் தந்திருக்கிறது இந்தப்பாடல்.

“காதலும் சாவோடும் முடிவதில்லை..” எனும் அழுத்தம் மிகுந்த வரிகள் தமிழ் சினிமாவின் சொல்லப்படாத பக்கத்தை பேசும் விதமாக அமைந்துள்ளது. பாடலின் காட்சி அமைப்பில், புதுமுக ஹீரோ அருண் பன்னீர்செல்வம் நடிக்க அவரது பெற்றோர்களாக இளங்கோ, கவுசல்யா மற்றும், ஹீரோயின் வித்யா பிள்ளை பெற்றோர்களாக புதுமுகம் தெய்வேந்திரன், நிமிஷா போன்றோர்கள் நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையில், விஜய் சூப்பர் சிங்கர் புகழ் முத்து சிற்பி கிராமத்து மணம் வீசும் குரலில் இப்பாடலை பாடியுள்ளார். வெளியான நொடியில் இசை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை இப்பாடல் பெற்றுள்ளது. வீணானதே தாய் தந்த பாலும்.. போன்ற வரிகளால் அர்த்தமுள்ளப் பாட்டாக படைத்திருந்தார் கவிஞர் யுகபாரதி.

அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை ,ஹர்ஷ் லல்வானி.ஜி, சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன் ,நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் அனைவரையும் கவனிக்க வைக்கும் படமாக உருவாகியுள்ளது.

More News

சமந்தாவை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா? மனம் திறந்த நாகசைதன்யா!

திரை உலகின் நட்சத்திர ஜோடியான நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் விவாகரத்து பெற்று பிரியபோவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர் என்பதும் இந்த அறிவிப்பு இரு தரப்பு ரசிகர்களுக்கும்

'எங்க வீட்ல அடுப்பு இல்லை என தாமரை கூறியது பொய்யா? வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் புளு மற்றும் சிகப்பு ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே சமையல் போட்டி வைக்கப்பட்டது. இந்த சமையல் போட்டியில் புளூ டீம் வெற்றி பெற்றதாக நடுவர் குழு அறிவித்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரசிகைக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்: வைரல் வீடியோ!

உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரசிகை ஒருவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வீடியோ மூலம் ஆறுதல் கூறிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த வாரம் எலிமினேஷன் ஆனவர் இந்த போட்டியாளர் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேசன் செய்யப்படுபவர் குறித்த தகவல் வெளியாகும் என்றும் அதில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர்

சிரிப்பதற்கு தடை விதித்த சர்வாதிகார நாடு… காரணம் தெரியுமா?

சர்வாதிகாரத்திற்குப் பெயர்போன வடகொரியாவில் உள்ள மக்கள் இன்று முதல் வரும் 10 நாட்களுக்கு யாரும் சிரிக்கக்கூடாது