'வேட்டையன்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? ரஜினியுடன் இணைவது யார் யார்?

  • IndiaGlitz, [Sunday,January 28 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பா என்ற பகுதியில் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் பகத் பாசில், ராணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மிக விரைவில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் ஸ்டைலில் ஒரு வலிமையான சமூகக் கருத்து இந்த படத்தில் இருப்பதாகவும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது கடப்பாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

சூர்யா ஜோடியாக ஸ்ரீதேவி மகளா? எந்த படத்தில் தெரியுமா?

சூர்யா ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது கோபமாக வருகிறது.. ராதிகா சொன்னது எந்த படத்தை?

நடிகை ராதிகா இந்த மாதிரி படங்களை பார்க்கும்போது தனக்கு கோபமாக வருகிறது என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து அது எந்த படமாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுடைய யூகங்களை பதிவு செய்து வருகின்றனர்.  

மாலையும் கழுத்துமாய் பெற்றோருடன் நடிகை தமன்னா. என்ன விசேஷம்?

நடிகை தமன்னா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அசாம் மாநில தலைநகர் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ள

மீண்டும் இணைந்த ஆர்யா - சந்தானம் கூட்டணி.. ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக..!

ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' உட்பட சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் இருவரும் இணைந்து நடித்தாலே காமெடி களைகட்டும் என்பதும் தெரிந்ததே.

காதலருக்கு பிறந்தநாள்.. கட்டிப்பிடித்து உருகி உருகி வாழ்த்து சொன்ன பிரியா பவானி சங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த பல ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வரும் நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.