close
Choose your channels

'வேட்டையன்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? ரஜினியுடன் இணைவது யார் யார்?

Sunday, January 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பா என்ற பகுதியில் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் பகத் பாசில், ராணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மிக விரைவில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் ஸ்டைலில் ஒரு வலிமையான சமூகக் கருத்து இந்த படத்தில் இருப்பதாகவும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது கடப்பாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.