ரஜினியின் '2.0' படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துவிட்டதா?

  • IndiaGlitz, [Thursday,April 28 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படத்தை பிரமாண்டமாக இயக்கி வரும் இயக்குனர் ஷங்கர் கடந்த 45 நாட்களாக டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்த படப்பிடிப்பில் '2.0' படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தற்போது டெல்லியில் கடுமையான வெயில் அடித்து வந்தபோதிலும் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் உள்பட படக்குழுவினர் கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாக வெற்றிகரமாக ஷங்கர் கிளைமாக்ஸை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்பு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு பெரும் சவாலாக இருந்ததாகவும், ஹெலிகேமரா உள்பட ஒருசில சாதனங்கள் எதிர்பாராமல் சேதம் அடைந்திருந்தபோதிலும் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் திருப்திகரமாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தீம்பார்க்கில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. ரஜினிகாந்த், எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இதில் படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் '2.0' படக்குழுவினர் பொலிவியா நாட்டிற்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உதயநிதியின் 'மனிதன்' - திரைமுன்னோட்டம்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகிய நிலையில் நாளை அவருடைய அடுத்த படமான 'மனிதன்' வெளியாகவுள்ளது...

நடிகை சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சமீபத்தில் வெளியான இளையதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'தெறி' நாயகி சமந்தா இன்று தனது இனிய பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில்....

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் நாயகி லட்சுமிமேனனா?

தற்போது கோலிவுட் திரையுலகில் மிகவிரைவாக படப்பிடிப்பை முடித்து அடுத்தடுத்து படங்களை வெளியிடும்...

விஜய் ஏற்பாடு செய்த 'தெறி' ஸ்பெஷல் காட்சி யாருக்கு தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது...

அஜித்-விஜய் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். விஷால்

சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்...