பிரபல நடிகையை கைது செய்ய தடை: இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

  • IndiaGlitz, [Tuesday,January 18 2022]

பிரபல நடிகையை கைது செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய இணையதளத்தில் பிரபல நடிகை பூனம் பாண்டேவின் ஆபாச படங்களும் இடம் பெற்றிருந்தன. இதனை அடுத்து தன்னை போலீசார் கைது செய்ய நேரிடலாம் என்ற எண்ணத்தில் தன்னை கைது செய்யக் கூடாது என பூனம் பாண்டே மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் மும்பை நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது பூனம் பாண்டேவை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது வாதிட்ட பூனம் பாண்டே வழக்கறிஞர், ‘பூனம் பாண்டேவின் ஆபாச படங்கள் இணையதளங்களில் உலா வருவதற்கு அவர் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் குற்றவாளி அல்லவென்றும், உண்மையிலேயே அவர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் என்றும் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பூனம் பாண்டேவை கைது செய்ய கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

More News

சமந்தா தான் எனக்கு சரியான ஜோடி: நாக சைதன்யா

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்ட நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா தனக்கு சரியான ஜோடி

இதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும்: தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து நடிகை கஸ்தூரி!

கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அவர்களது ரசிகர்களுக்கு

இதெல்லாம் தேவையா? நெட்பிளிக்ஸின் 'மணி ஹெய்ஸ்ட்' அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கேள்வி!

நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான 'மணி ஹெய்ஸ்ட்' என்ற வெப்சீரிஸ் மிக உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐந்தாம் சீசனின் இரண்டாம்

கார் வேண்டாம், வேறு ஏதாவது கொடுங்கள்: முதல்வருக்கு இயக்குனர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கார் பரிசு அளிப்பதற்கு பதிலாக வேறு ஏதேனும் பரிசு அளிக்கலாம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரொனால்டோவுக்கு கிடைத்த சிறப்பு விருது… உற்சாகத்தில் பொங்கும் ரசிகர்கள்!

சர்வதேச கால்பந்தில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்காக