close
Choose your channels

பிரபல நடிகையை கைது செய்ய தடை: இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

Tuesday, January 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையை கைது செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய இணையதளத்தில் பிரபல நடிகை பூனம் பாண்டேவின் ஆபாச படங்களும் இடம் பெற்றிருந்தன. இதனை அடுத்து தன்னை போலீசார் கைது செய்ய நேரிடலாம் என்ற எண்ணத்தில் தன்னை கைது செய்யக் கூடாது என பூனம் பாண்டே மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் மும்பை நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது பூனம் பாண்டேவை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது வாதிட்ட பூனம் பாண்டே வழக்கறிஞர், ‘பூனம் பாண்டேவின் ஆபாச படங்கள் இணையதளங்களில் உலா வருவதற்கு அவர் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் குற்றவாளி அல்லவென்றும், உண்மையிலேயே அவர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் என்றும் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பூனம் பாண்டேவை கைது செய்ய கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.