ஷங்கர் - ராம்சரண் படத்தில் வில்லனாக நடிப்பது பாராளுமன்ற எம்பியா?

  • IndiaGlitz, [Tuesday,October 26 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார் என்பதும் மேலும் ஒரு சில முக்கிய கேரக்டர்களில் அஞ்சலி, சுனில் உள்பட ஒருசிலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. ஷங்கர்- ராம்சரண் படத்தின் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகரும் பாராளுமன்ற எம்பியுமான சுரேஷ்கோபி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ’அன்னியன்’ என்ற திரைப்படத்தில் சுரேஷ்கோபி வில்லனாக நடித்திருக்கிறார் என்ற நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ்கோபி இந்த படத்தில் இணைந்தால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
 

More News

தனுஷின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசான போது தனது அதிருப்தியை தனுஷ் தெரிவித்து இருந்தார் என்பதும் ரசிகர்களும் இந்த படமும் திரைக்கு வரவில்லை என்று

அசர வைக்கும் நடிகர் மாதவனின் மகன்… பதக்கங்களை குவித்து சாதனை!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக விளங்கும் நடிகர் மாதவனின் மகன்

ரூ.3 கோடி வரி பாக்கி… ஆட்டோ ஓட்டுநருக்கு வந்த நோட்டீஸால் அதிர்ச்சி!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.3 கோடி வருமான வரி

ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து பல அரசியல் பிரபலங்கள், திரை உலக பிரபலங்கள்,

விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நடிகை சமந்தா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து