'பசங்க 2' படத்திற்காக பரிசு பெற்ற பாண்டிராஜ்

  • IndiaGlitz, [Thursday,January 07 2016]

'பசங்க' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க 2' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகி எதிர்பார்த்ததைவிட சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்கள் கொடுத்த மதிப்புமிகுந்த விமர்சனங்களால் படம் அபாரமான வசூலை குவித்துள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் சூர்யா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

'பசங்க 2' படத்திற்காக இயக்குனர் பாண்டியராஜ் கடந்த பல வருடங்களாக பல குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து ஏகப்பட்ட ஆய்வுகளை செய்துள்ளார். அவருடைய கடுமையான உழைப்பிற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம், இயக்குனர் பாண்டியராஜூக்கு கார் ஒன்றை நேற்று பரிசளித்துள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாண்டியராஜ் அவர்களுக்கு காரின் சாவியை 2D நிறுவன நிர்வாகிகள் கொடுத்து அவரை கெளரவப்படுத்தியுள்ளனர்.

More News

'தெறி' படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவல்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ளது...

சூர்யா-ஹரியின் 'சிங்கம் 3' படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு

சூர்யா-ஹரி இணைந்து 'சிங்கம்', சிங்கம் 2; ஆகிய இரண்டு தொடர் வெற்றி படங்கள் கொடுத்ததை அடுத்து இந்த படங்களின் அடுத்த பாகமான 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இன்று விசாகப்பட்டணத்தில் ஆரம்பமாகவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்..

பாபிசிம்ஹா படப் பாடலை வெளியிட்ட கார்த்தி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தின் மூலம் பெரும்புகழும், தேசிவிருதும் பெற்ற நடிகர் பாபிசிம்ஹா தற்போது கோ 2, இறைவி, பெங்களூர் நாட்கள், பாம்புச்சட்டை, மெட்ரோ, ...

பொங்கலுடன் முடிவுக்கு வருகிறது விஜய்யின் ''தெறி''

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ''தெறி'' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது..........

ரஜினியை அடுத்து அதர்வாவுக்கும் பாலிவுட் வில்லன்

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக அரவிந்தசாமி நடித்த பின்னர் வில்லன் வேடத்திற்கு என்று தனி மதிப்பு வந்துவிட்டது...