close
Choose your channels

'பசங்க 2' படத்திற்காக பரிசு பெற்ற பாண்டிராஜ்

Thursday, January 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பசங்க' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க 2' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகி எதிர்பார்த்ததைவிட சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்கள் கொடுத்த மதிப்புமிகுந்த விமர்சனங்களால் படம் அபாரமான வசூலை குவித்துள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் சூர்யா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

'பசங்க 2' படத்திற்காக இயக்குனர் பாண்டியராஜ் கடந்த பல வருடங்களாக பல குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து ஏகப்பட்ட ஆய்வுகளை செய்துள்ளார். அவருடைய கடுமையான உழைப்பிற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம், இயக்குனர் பாண்டியராஜூக்கு கார் ஒன்றை நேற்று பரிசளித்துள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாண்டியராஜ் அவர்களுக்கு காரின் சாவியை 2D நிறுவன நிர்வாகிகள் கொடுத்து அவரை கெளரவப்படுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.