ஜல்லிக்கட்டுக்காக 'சிங்கம் 3' படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Wednesday,January 18 2017]

சூர்யா நடிப்பில் உருவான 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யா, தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று படத்தை புரமோஷன் செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து தீவிரமாக போராடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு என்ற ஒரே குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. அனைத்து ஊடகங்களும் ஜல்லிக்கட்டு குறித்த செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி வருகிறது.
எனவே இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 'சிங்கம் 3' படக்குழுவினர்களும் குரல் கொடுக்க உள்ளதாகவும், அதனால் திருநெல்வேலி மற்றும் மதுரையில் நடத்த திட்டமிட்டிருந்த புரமோஷன் விழா ரத்து செய்யப்படுவதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கம் 3 படத்தின் விளம்பரத்திற்காக ஜல்லிக்கட்டு குறித்து சூர்யா பேசி வருவதாக குற்றம் சாட்டிய பீட்டா அமைப்புக்கு இந்த முடிவு சரியான பதிலடியாக இருக்கும் என்பதே அனைத்து சூர்யா ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

More News

ஜல்லிக்கட்டு: பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் கடிதம்

ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் விஷால் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக வெளிவந்த வதந்தியை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

பீட்டாவுக்கும் ஆதரவு, ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவு. பிரபல பாடகி

தற்போது இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மட்டுமின்றி பீட்டாவுக்கு எதிரான போராட்டமாகவும் உள்ளது. .

இளைஞர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். நயன்தாரா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இளைஞர்களின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

மெரினா ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் சிவகார்த்திகேயன்

எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் இளைஞர்கள் பட்டாளம் முதன்முதலில் ஒன்று சேர்ந்து நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது.

சீறும் சிங்கங்களாக போராடும் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் பாராட்டு

கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்.