close
Choose your channels

ஜல்லிக்கட்டுக்காக 'சிங்கம் 3' படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

Wednesday, January 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் உருவான 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யா, தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று படத்தை புரமோஷன் செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து தீவிரமாக போராடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு என்ற ஒரே குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. அனைத்து ஊடகங்களும் ஜல்லிக்கட்டு குறித்த செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி வருகிறது.
எனவே இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 'சிங்கம் 3' படக்குழுவினர்களும் குரல் கொடுக்க உள்ளதாகவும், அதனால் திருநெல்வேலி மற்றும் மதுரையில் நடத்த திட்டமிட்டிருந்த புரமோஷன் விழா ரத்து செய்யப்படுவதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கம் 3 படத்தின் விளம்பரத்திற்காக ஜல்லிக்கட்டு குறித்து சூர்யா பேசி வருவதாக குற்றம் சாட்டிய பீட்டா அமைப்புக்கு இந்த முடிவு சரியான பதிலடியாக இருக்கும் என்பதே அனைத்து சூர்யா ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.