close
Choose your channels

'சூர்யா 42' குறித்த சூப்பர் தகவல் சொன்ன படக்குழுவினர்: வைரல் புகைப்படம்!

Tuesday, October 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்துவரும் 42வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கோவாவில் நடந்து வந்தது என்பது தெரிந்ததே. சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’சூர்யா 42’ படத்தின் கோவா படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சூர்யா விருது வாங்குவதற்காக டெல்லி சென்றிருந்ததால் முதல்கட்ட படப்பிடிப்பு முடியும் நிறைவு நாளில் அவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’சூர்யா 42’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் அதில் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையில், பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வரும் இந்த படம் 3D டெக்னாலஜியில் 10 மொழிகளில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.