'சூர்யா 42' படக்குழுவினர் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு: பெரும் பரபரப்பு!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ திரைப்படம் 3டி டெக்னாலஜியில் உருவாகி வருகிறது என்றும் இந்த படம் தமிழ் உள்பட 10 இந்திய மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆன பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ’சூர்யா 42’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் படக்குழுவினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு தீர்வு காணும் விதமாக இந்த எச்சரிக்கை அறிக்கை வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். எங்கள் தயாரிப்பு திரைப்படமான ’சூர்யா 42’ படப்பிடிப்பு தளங்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதை நாங்கள் கவனித்து வருகிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் ரத்தம் மற்றும் வியர்வையை உள்ளடக்கியது. இந்த படத்தை அனைவருக்கும் திரையரங்குகளில் பிரமாண்டமான அனுபவமாக தர விரும்புகிறோம். எனவே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீங்கள் வெளியிட்டு இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும். எதிர்காலத்திலும் அதை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்பவர்கள் மீது உரிமை மீறல் தடை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

'தலைவர் 170' படத்திற்கு ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா? கோலிவுட் ஆச்சரியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் 'தலைவர் 170' திரைப்படத்திற்காக அதைவிட அதிகமாக சம்பளத்தை லைகா நிறுவனம்

ஒரு முடிவோட தான் இருக்காங்க போல.. அமலாபால் சிங்கிள் பீஸ் பிகினி புகைப்படங்கள்!

 நடிகை அமலாபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து பிகினி புகைப்படங்கள் உள்பட கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து

என்னை கூட்டிட்டு போய் ஏமாத்திட்டாங்க.. பிக்பாஸ் ரகசியங்களை உடைக்கும் நடிகை!

 பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6 கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும்

ஒரே ஒரு தப்பு செய்ததால் ஏற்பட்ட விபரீதம்: தமிழ் சீரியல் நடிகையின் கண்ணீர் வீடியோ

ஒரே ஒரு தப்பு செய்ததால் தனக்கு ஏற்பட்ட விபரீதம் குறித்து சீரியல் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

'பொன்னியின் செல்வன்' நட்சத்திரங்களுக்கு எவ்வளவு சம்பளம்? அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.