'சில்லுக்கருப்பட்டி' இயக்குனருக்கு சிறப்பு பரிசு கொடுத்த ஜோதிகா!

  • IndiaGlitz, [Sunday,February 23 2020]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு கோலிவுட் திரையுலகினர் இந்த படத்தை கொண்டாடினார் அதுமட்டுமின்றி இந்த படத்தை இயக்கிய பெண் இயக்குநர் ஹலிதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன அவருக்கு பாராட்டு விழாவும் சமீபத்தில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘சில்லுக்கருப்பட்டி’ பட இயக்குனர் ஹலிதா மற்றும் அவரது படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்த சூர்யா-ஜோதிகா தம்பதியினர், படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் கேக் வெட்டி இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினார். இதனை அடுத்து ஜோதிகா சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதாவுக்கு ஆப்பிள் மேக்புக் ஒன்றை தமது சார்பில் பரிசாக கொடுத்தார்.

இதுகுறித்து இயக்குனர் ஹலிதா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சூர்யா மற்றும் ஜோதிகா எங்கள் டீமை வீட்டுக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்ததை எண்ணி நான் பேச்சற்று போனேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன். ஜோதிகா அவர்கள் எனக்கு ஆப்பிள் மேக்புக் ஒன்றை பரிசாக கொடுத்தது என்னால் மறக்க முடியாத நிகழ்வு என்று கூறியுள்ளார். தற்போது இயக்குனர் ஹலிதா ‘ஏலே’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்னுடைய ஒரே ரொமான்ஸை தடுத்துவிட்டார்கள்: வீடியோவில் அழுத நித்யானந்தா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாகி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, அவ்வப்போது வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும்

தமிழ் திரைப்பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிர்வாகம்!

தமிழ் திரைப்பட நடிகை ஒருவரிடம் ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அடப்பாவி, உன்னை போயி போராளின்னு நினைச்சேனே! கஸ்தூரி டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றிருந்தபோது

அச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்

கொல்லிமலை என்று சொன்னாலே நம்மையும் அறியாமல் ஒரு அச்சம் உள்ளூறத் தொற்றி கொள்வது இயல்புதான்.

ரஜினியை முதல்முறையாக பார்த்த தருணம்: கார்த்திக் நரேன் 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் நேற்று வெளியான 'மாஃபியா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது