தரம் தாழ்ந்த விமர்சனம்: தொலைக்காட்சி அலுவலகம் முன் சூர்யா ரசிகர்கள் போராட்டம்

  • IndiaGlitz, [Saturday,January 20 2018]

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு விஜேக்கள் சூர்யாவின் உயரம் குறித்து கிண்டலடித்து பேசிய விவகாரம் சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்தி அடைய செய்தது. இந்த நிலையில் விஜேக்களின் தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு சூர்யாவின் ரசிகர்களும், கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய கண்டங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் சூர்யாவின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விஜேக்களுக்கு எதிராகவும், தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில், 'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற' என்று கூறியுள்ளார்.

More News

உயரம் குறித்த விமர்சனத்திற்கு சூர்யாவின் முதிர்ச்சியான கருத்து

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய 2 பெண் விஜேக்கள், சூர்யாவின் உயரம் குறித்து கிண்டலடித்தனர். இவர்களுடைய விமர்சனத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

பொக்கேவுக்கு பதில் செக்: இரும்புத்திரை ஆடியோ விழாவில் அசத்திய விஷால்

விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் இயக்குனர் மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

பேருந்து கட்டணம் உயர்வு எவ்வளவு? ஒரு அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி இயக்குனர்

சமீபத்தில் வெளியான இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவை சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' மற்றும் விக்னேஷ் சிவனின் 'தானா சேர்ந்த கூட்டம்.

கமல்ஹாசனின் அரசியலுக்கு ஆதரவு தரும் மன்னர் பரம்பரையினர்!

கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினமே தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.