close
Choose your channels

உயரம் குறித்த விமர்சனத்திற்கு சூர்யாவின் முதிர்ச்சியான கருத்து

Saturday, January 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இரண்டு பெண் விஜேக்கள், சூர்யாவின் உயரம் குறித்து கிண்டலடித்தனர். இவர்களுடைய விமர்சனத்திற்கு அந்த தொலைக்காட்சியின் சக விஜேக்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே அந்த தொலைக்காட்சிக்கும், விஜேக்களுக்கும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய நடிகர் சூர்யா, 'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற' என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரையாக கூறியுள்ளார்.

ஏற்கனவே 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் 'யார் என்ன பேசினாலும் அன்பாவே இருப்போம்' என்று பேசிய சூர்யா, தற்போது முதிர்ச்சியான அறிவுரையை ரசிகர்களுக்கு வழங்கியதன் மூலம் அவருடைய குணத்தின் உயரம் வானளவு உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.