என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம்: ரசிகர்கள் முன் பேசிய சூர்யா

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கீர்த்திசுரேஷ், விக்னேஷ் சிவன், அனிருத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசியதாவது:

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படபிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக 'தானா சேர்ந்த கூட்டம்' இருக்கும். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “தானா சேர்ந்த கூட்டத்தை“ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது.

இப்படத்துக்கென எதிர்பார்ப்பை, கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன்.

இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.

நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும் , என்ன நடந்தாலும் , அன்பாவே இருப்போம்' இவ்வாறு நடிகர் சூர்யா பேசினார்.

More News

கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்திய இந்திய விமான பணிப்பெண் கைது

இதுவரை விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விமான பணிப்பெண் ஒருவரே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வைரமுத்து பேச்சால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல பாடகி

கவியரசு வைரமுத்து சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யாரோ வெளி நாட்டவர் எழுதிய கட்டுரை தேவையா? வைரமுத்து விவகாரம் குறித்து விவேக்

சமீபத்தில் ஆண்டாள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவியரசு வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறினார்.

ரசிகர்களுக்கு த்ரிஷா தரும் பொங்கல் விருந்து

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் த்ரிஷாவின் படம் எதுவும் வெளிவரவில்லை எனினும், தனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாத வகையில் அவர் நடித்த 'மோகினி' படத்தின் பாடல்கள் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.

என்னை நானே புதுப்பித்து கொண்டேன்: தானா சேர்ந்த கூட்டம்' பட விழாவில் சூர்யா

'தானா சேர்ந்த கூட்டம்' நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் சிறப்பு விழா ஒன்று சென்னையில் நடந்தது.