close
Choose your channels

வைரமுத்து பேச்சால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல பாடகி

Thursday, January 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவியரசு வைரமுத்து சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்துவுக்கு திரைத்துறையினர் பலரே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரபல பின்னணி மற்றும் கிராமிய பாடகியும், பேராசிரியையுமான விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் வைரமுத்துவின் சர்ச்சை கருத்தை கேட்டதில் கண்ணீர் விட்டு கதறி அழுவதோடு, உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்

இதுகுறித்து விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: ராஜபாளையத்தில் இந்த அபாண்டமான கருத்தை வைரமுத்து பேசியுள்ளார். அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர்தான் ஸ்ரீவில்லிபுத்தூர். அங்குள்ள ஆண்டாள் காதுக்கு இது சென்றடைந்தால் அவர் மனம் என்ன பாடுபடும். வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளதை ஏற்று கொள்ள மாட்டோம். ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டு சாரி என்று சொன்னால் விட்டுவிடுவோமா! ஆண்டாளின் சந்நிதிக்கு நேரடியாக வந்து ஆண்டாளின் பாதத்தில் விழுந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை எங்களுடைய உண்ணாவிரத போராட்டம் தொடரும்' என்று  கூறியுள்ளார்

மேலும் வைரமுத்துவின் கருத்தை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆண்டாளை இழிவாக பேசியதாக கவிஞர் வைரமுத்துவை கைது செய்ய வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமானுஜ ஜீயர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.