பிப்ரவரியில் தியேட்டர், ஏப்ரலில் டிவி: சூர்யா பட ரிலீஸ் குறித்த சூப்பர் பிளான்!

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தை பிப்ரவரியில் திரையரங்கிலும் ஏப்ரலில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னரே ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் ரிலீசாகும் முதல் படமாக ’எதற்கும் துணிந்தவன்’ படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் 'எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்துவிட்டு அதன் பின்னர் ஏப்ரல் 14ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்ப சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

More News

பிரபுதேவாவின் அடுத்த படத்தின் அட்டகாசமான அறிவிப்பு!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் பிரபுதேவா தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

திடீரென தெலுங்கில் டிரெண்ட் ஆகும் விஜய்யின் ஹேஷ்டேக்: என்ன காரணம்?

தளபதி விஜய் குறித்த ஹேஷ்டேக்குகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆவது சர்வசாதாரண ஒன்று என்பதும் வாரத்திற்கு இரண்டு முறையாவது விஜய்யின் ஹேஷ்டேக்குகள்

சிம்புவின் அடுத்த பட வியாபாரம் முடிந்தது: ரிலீஸ் எப்போது?

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்றும் அதே போல் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'பத்து தல'  படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது 

சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து?

பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளின் போது ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்சேதுபதியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸா?

நடிகர் விஜய் சேதுபதி நடித்த  மூன்று திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.