close
Choose your channels

பிப்ரவரியில் தியேட்டர், ஏப்ரலில் டிவி: சூர்யா பட ரிலீஸ் குறித்த சூப்பர் பிளான்!

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தை பிப்ரவரியில் திரையரங்கிலும் ஏப்ரலில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னரே ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் ரிலீசாகும் முதல் படமாக ’எதற்கும் துணிந்தவன்’ படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் 'எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்துவிட்டு அதன் பின்னர் ஏப்ரல் 14ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்ப சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment