'மாநாடு' தயாரிப்பாளர் மீது டி.ராஜேந்தர் வழக்கு: என்ன காரணம்?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சிம்பு நடித்த 'மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றியை சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி உள்பட படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 'மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதனை அடுத்து ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ’மாநாடு’ திரைப்படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்த எங்களை கலந்து ஆலோசிக்காமல் அந்த படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதாக டி ராஜேந்தர் தனது மனுவில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments