பிரார்த்தனை செய்தாலும் இறைவனை மீறி எதுவும் நடக்காது:  அமெரிக்கா செல்லும் முன் டிஆரின் கண்ணீர் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,June 14 2022]

என்னதான் பிரார்த்தனை செய்தாலும் இறைவனின் விதியை மீறி எதுவும் நடக்காது என உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் டி ராஜேந்தர் பேட்டியளித்துள்ளார்.

நடிகரும் இயக்குனரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மருத்துவரின் அறிவுரையின்படி மேல் சிகிச்சைக்காக டி ராஜேந்தர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ள சிம்பு சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இன்று மாலை அமெரிக்காவுக்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த டி ராஜேந்தர் கூறியபோது, ‘உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன் என்று நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தது கிடையாது என்றும் கூறினார்.

மேலும் நான் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தவர்களுக்கு எனது நன்றியை என்றும் யார் என்ன செய்தாலும் விதியை யாராலும் ஜெயிக்க முடியாது என்றும் இறைவனை மீறி எதுவும் நடக்காது என்றும் கண்ணீருடன் பேட்டி அளித்தார். அவருடைய இந்த பேட்டியில் மிகவும் உருக்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சந்திரமுகி 2' படத்தின் அறிவிப்பில் ஒரு ஆச்சரியம்: வைரல் போஸ்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'சந்திரமுகி'. இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று

தமிழ் சினிமாவின் மான மரியாதையை காப்பாற்றிய படம் 'விக்ரம்': பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவின் மானம் மரியாதையை காப்பாற்றிய படம் 'விக்ரம்' என்ற பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்சுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் இருக்கின்றதா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று இரண்டாவது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிவருகிறது.

'புன்னகை மன்னன்' ஸ்டைலில் ஒரு சம்பவம்: ஆனால் வேற லெவல் டுவிஸ்ட்!

கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' ஸ்டைலில் தற்கொலை செய்து கொள்ள ஒரு காதல் ஜோடி சென்ற நிலையில் அந்த சம்பவத்தில் நடந்த டுவிஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை சுற்றி வளைத்து அடித்த 4 ரெளடி பெண்கள்: அதிர்ச்சி வீடியோ

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை 4 ரவுடி பெண்கள் சுற்றி வளைத்து அடித்து நொறுக்கிய காட்சியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை