பிரார்த்தனை செய்தாலும் இறைவனை மீறி எதுவும் நடக்காது: அமெரிக்கா செல்லும் முன் டிஆரின் கண்ணீர் பேட்டி


Send us your feedback to audioarticles@vaarta.com


என்னதான் பிரார்த்தனை செய்தாலும் இறைவனின் விதியை மீறி எதுவும் நடக்காது என உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் டி ராஜேந்தர் பேட்டியளித்துள்ளார்.
நடிகரும் இயக்குனரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மருத்துவரின் அறிவுரையின்படி மேல் சிகிச்சைக்காக டி ராஜேந்தர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ள சிம்பு சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இன்று மாலை அமெரிக்காவுக்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த டி ராஜேந்தர் கூறியபோது, ‘உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன் என்று நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தது கிடையாது என்றும் கூறினார்.
மேலும் நான் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தவர்களுக்கு எனது நன்றியை என்றும் யார் என்ன செய்தாலும் விதியை யாராலும் ஜெயிக்க முடியாது என்றும் இறைவனை மீறி எதுவும் நடக்காது என்றும் கண்ணீருடன் பேட்டி அளித்தார். அவருடைய இந்த பேட்டியில் மிகவும் உருக்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.