'தலைவா' படத்திற்கு பின்னர் விஜய்யுடன் மீண்டும் இணையும் 'வி.ஐ.பி'

  • IndiaGlitz, [Tuesday,July 07 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் பாடல்கள் வெளியீடு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது அனைவரும் அறிவோம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்நிலையில் விஜய் நடித்து வரும் அடுத்த 'விஜய் 59' படத்தின் அனைத்து பாடல்களையும் பிரபல பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இளையதளபதியின் 'தலைவா' படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதிய நா.முத்துக்குமார் மீண்டும் அவருடைய படத்திற்கு பாடல்கள் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தலைவா' படத்தில் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதால் நா.முத்துகுமார், மீண்டும் விஜய் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 'விஜய் 59' படத்தில் இடம்பெறவுள்ள ஐந்து பாடல்களும், தலைவா' படத்தின் பாடல்களை விட மிகப்பெரிய ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய்யின் அறிமுகப்பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது.

More News

பிரகாஷ் ராஜுடன் மீண்டும் இணையும் திமிரு நடிகை

தேசிய விருது பெற்ற திரைப்படமான 'காஞ்சிவரம்' படத்தில் இணைந்த இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் பிரகாஷ்ராஜ் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக வெளிவந்த செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம்......

கமல் பெயரில் ஒரு வங்கி கொள்ளை படம்

உலக நாயகன் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மய்யம்' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்......

கொம்பனுடன் இணையும் பாயும் புலி

நடிகர் சங்க தேர்தல் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு புறம் திட்டமிட்ட படப்பிடிப்புகளை தவறாமல் நடத்தி வரும் நடிகர் விஷால், சமீபத்தில் பாயும் புலி' படப்பிடிப்பை முடித்துவிட்டார்....

கமல், அஜித், சூர்யா- தீபாவளிக்கு மோதும் நட்சத்திரங்கள்?

நடிகர் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் சிவா இயக்கத்தில் சீராக வளர்ந்துகொண்டிருக்கிறது. மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு இத்தாலியில்...

பாகுபலி 2ஆம் பாகத்தில் சூர்யா நடிக்கின்றாரா? ராஜமவுலி விளக்கம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள 'பாகுபலி' படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில்...