close
Choose your channels

'தலைவா' படத்திற்கு பின்னர் விஜய்யுடன் மீண்டும் இணையும் 'வி.ஐ.பி'

Tuesday, July 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் பாடல்கள் வெளியீடு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது அனைவரும் அறிவோம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்நிலையில் விஜய் நடித்து வரும் அடுத்த 'விஜய் 59' படத்தின் அனைத்து பாடல்களையும் பிரபல பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இளையதளபதியின் 'தலைவா' படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதிய நா.முத்துக்குமார் மீண்டும் அவருடைய படத்திற்கு பாடல்கள் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தலைவா' படத்தில் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதால் நா.முத்துகுமார், மீண்டும் விஜய் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 'விஜய் 59' படத்தில் இடம்பெறவுள்ள ஐந்து பாடல்களும், தலைவா' படத்தின் பாடல்களை விட மிகப்பெரிய ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய்யின் அறிமுகப்பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.