தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,March 21 2023]

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனர் ஜிஎம் குமார் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’கேப்டன் மகள்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ’தொட்டி ஜெயா’ ’வெயில்’ ’மலைக்கோட்டை’ ’குருவி’ உள்பட பல படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் உருவான ’அவன் இவன்’ என்ற படம் தான் இவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ’அறுவடை நாள்’ ’பிக்பாக்கெட்’ ’இரும்பு பூக்கள்’ ’உருவம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் ஜிஎம் குமார் தனது சமூக வலைதளத்தில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் ’ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை’ என்றும் அந்த புகைப்படத்திற்கு அவர் கேப்ஷனாகபதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு காமெடியான கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

More News

சிம்ரனின் இரண்டாவது மகனா இவர்? புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்..!

நடிகை சிம்ரனின் இரண்டாவது மகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

குறிபார்த்து அடித்த நதியா: படப்பிடிப்பின் இடையே எடுத்த வீடியோ வைரல்..!

நடிகை நதியா வில்லிலிருந்து குறி பார்த்து அம்பை விட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது .

44 வயதில் தொழிலதிபருடன் திருமணம்: ரஜினி, கமல் பட நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

ரஜினி, கமல், சரத்குமார் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் 44 வயதில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'வலி தெரியாம இருக்க, அதைவிட பெரிய வலியை கொடுக்கணும்: 'ஆகஸ்ட் 16 1947' டிரைலர்..!

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில், பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 'ஆகஸ்ட் 16 1947'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

பாக்யராஜ் குடும்பத்திற்கு நன்றிக்கடன்.. ஷாந்தனு படத்தின் தயாரிப்பாளர் துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி..!

துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில்  சாந்தனு நடிப்பில் உருவான திரைப்படம் 'ராவண கூட்டம்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது