close
Choose your channels

தண்ணீர் தொட்டியில் குழந்தை பெற்ற தமிழ் நடிகரின் மனைவி.. ஷாக்கிங் வீடியோ..!

Saturday, June 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகரின் மனைவி தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை பெற்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஷங்கரின் ‘பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நகுல். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 2020 ஆம் ஆண்டு அகிரா என்ற மகள் பிறந்த நிலையில் மீண்டும் அவர் கடந்த ஆண்டு கர்ப்பமானார். இந்த நிலையில் தனது இரண்டாவது மகனை அவர் தான் ஏற்கனவே பலமுறை கேள்விப்பட்ட தண்ணீர் தொட்டிக்குள் பிரசவம் என்பதை செய்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

அதற்காக அவர் மருத்துவர் இடம் தகுந்த ஆலோசனை பெற்று மருத்துவரின் உதவியுடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி ஆண் குழந்தை பெற்றார். இந்த குழந்தைக்கு அமோர் என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது இரண்டாவது குழந்தையின் பிரசவம் குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதில் உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் அந்த வீடியோவை தற்போது பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் ஸ்ருதி பாஸ்கர், நகுல் அருகே உட்கார்ந்து கொண்டிருக்கும் நிலையில் பெண் மருத்துவர் தண்ணீருக்குள் இருக்கும் அவருக்கு பிரசவம் பார்க்கிறார். இந்த காட்சிகள் பார்ப்பதற்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.