close
Choose your channels

சமீபத்தில் வெளியான படத்தில் நாயகியாக நடித்த தமிழ் நடிகை தற்கொலை: காதல் தோல்வியா?

Sunday, September 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்த தமிழ் நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நாசர் உள்பட பலர் நடித்த ’வாய்தா’ என்ற திரைப்படம் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மஹிவர்மன் என்பவர் இயக்கி இருந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக பவுலின் ஜெஸிகா என்பவர் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை ஜெஸிகா தனது விருகம்பாக்கம் வீட்டில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

29 வயதாகும் தீபா, மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்த நிலையில் ‘வாய்தா’ என்ற படத்தில்தான் நாயகியாக நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மேலும் ஒருசில படங்களில் அவர் கமிட் ஆகயிருந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகினர் மீளாத நிலையில் தற்போது மேலும் ஒரு இளம் நடிகை தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos