close
Choose your channels

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியான பதிவு..!

Sunday, May 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அதில் அவர் நெகிழ்ச்சியான சில விஷயங்களை கூறியுள்ளார். இதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2003 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான ’உன்னை சரணடைந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன். அதன் பிறகு அவர் ’அறிவுமணி’ ’ஜெர்ரி’ ’கத்திக்கப்பல்’ ’ஆட்டநாயகன்’ ’குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’ ’அடங்கமறு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வால் என்பவரை மீரா வாசுதேவன் திருமணம் செய்த நிலையில் 2010ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன்பின் 2012 ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொகைனை திருமணம் செய்து 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும், ஜான் கொகைன் அதன்பின் நடிகை பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை மீரா வாசுதேவன், விபின் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த 21ஆம் தேதி கோவையில் இவர்களது திருமணம் நடந்தது. இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள மீரா வாசுதேவன் ’மே 21ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் கோவையில் நடந்த இந்த திருமணத்தில் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது கணவர் விபின் குறித்து அவர் கூறுகையில் ’பாலக்காடு ஆத்துரை பகுதியைச் சேர்ந்தவர், அவர் ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் என்றும் சர்வதேச விருதுகளையும் வென்றவர் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு தற்போது திருமணம் செய்து கொண்டோம் என்றும் எங்களை ரசிகர்கள் ஆசிர்வதிக்க வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மீரா வாசுதேவனின் இந்த பதிவை அடுத்து ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.