திரையரங்க வேலைநிறுத்தத்திற்கு எதிராக அதிரடி முடிவு எடுத்த தயாரிப்பாளர் சங்கம்

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

ஜிஎஸ்டி என்னும் புதிய வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திங்கள் முதல் தமிழகம் முழுவதும் திரையரங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுப்பது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
சினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி(GST) மற்றும் கேளிக்கை வரியால் சினிமாத்துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவினை எடுக்கும் முன்பு அனைத்து தயாரிப்பாளர்களின் நிலைமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். தயாரிப்பாளர்கள் நலனுக்காக தான் நாம் அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் 20 தயாரிப்பாளர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும் வகையில் ஒரு முடிவை எடுப்பது என்பது தயாரிப்பாளர்கள் சங்கம் உடன்படியாத விஷயம். மாநில அரசுக்கு நம் தேவைகளை புரிந்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தரவேண்டிய தேவையும் உள்ளது. இதனை பொருட்டில் கொண்டு வருகிற திங்கள் முதல் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஆதரவு அளிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அன்புடன் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ஜிஎஸ்டி வரியால் எது குறையும்? எது உயரும்?

இன்று முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி என்னும் புதிய வரி நடைமுறைக்கு வந்துள்ளதால் பல பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது வெங்கட்பிரபு டீமின் கலகலப்பான பிக்பாஸ்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து பல மிமிக்களும் வீடியோக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன

பாடகி சுசித்ரா ரிலீஸ் செய்த புதிய வீடியோ

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி கோலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்தது.

எந்த லெவலுக்குப் போவேன் என்று மிரட்டுகிறார்! பாலாஜியின் மனைவி புகார்

நகைச்சுவை நடிகர் பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த மே மாதம் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தன்னை ஜாதியின் பெயர் சொல்லி பாலாஜி திட்டியதாக அவரது மனைவி நித்யா புகார் அளித்திருந்தார்.

ஜிஎஸ்டி விவகாரத்தில் ரஜினியின் மெளனம் ஏன்? டி.ராஜேந்தர்

நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகள் இந்த புதிய வரிவிதிப்பால் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.