தயாரிப்பாளர் சங்கத்தின் பாதுகாப்பு அணியில் யார் யார்? பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் விஷால் அணியும் பாரதிராஜா அணியும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விஷால் அணியை போட்டியிட விடாமல் செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி என்ற ஒரு அணியை தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் சற்று முன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழ்‌ திரைப்பட தயாரிப்பாளர்களின்‌ நலன்‌, வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ்‌ சினிமாவில்‌ அனுபவம்‌ வாய்ந்த தயாரிப்பாளர்கள்‌ ஒருங்கிணைந்து ஒரு சிறந்த அணியை கருவாக்கி, வருகின்ற தயாரிப்பாளர்கள்‌ சங்க தேர்தலில்‌ போட்டியிடுகிறது. அணியின்‌ அங்கத்தினர்களின்‌ விபரங்கள்‌ கீழே கொடுக்கப்‌ பட்டுள்ளது.

திரு டி. சிவா, தலைவர்‌
திரு கே.முரளிதரன்‌
திரு பி.எல் தேனப்பன்‌, செயலாளர்‌
திரு ஜேஎஸ்கேசதிஷ்‌ குமார, செயலாளர்‌
திரு ஆர்கே. சுரேஷ்‌, துணை தலைவர்‌
திரு ஜி. தனஞ்செயன்‌, துணை தலைவர்‌
திரு. ராஜன்‌
தரு. ராதாரவி
திரு. கே.எஸ்.ஸ்ரீனிவாசன்‌
திரு. சித்ரா லக்ஷ்மணன்‌
திரு. ஹெச்.முரளி
திரு. எஸ்.எஸ்.துரைராஜ்‌
திரு. விஜயகுமார்‌
திரு. கே.உதயகுமார்‌
திரு. மனோஜ்‌ குமார்‌
திரு. . நந்தகோபால்‌
திரு. மனோபாலா
திரு. பாபு கணேஷ்‌
திரு. பஞ்சு சுப்பு
தரு. எம்.எஸ்.முருகராஜ்‌
திரு. வினோத்‌ குமார்‌
திரு. ரங்கநாதன்‌
திரு. பஞ்ச்‌ பரத்‌
திரு. மதுரை செல்வம்‌ மற்றும்‌ மூன்று தயாரிப்பாளர்கள்‌

திரைப்படம்‌ எடுக்கும்‌ தயாரிப்பாளர்கள்‌ பாதுகாப்பாக திரைப்படங்கள்‌ எடுக்கவும்‌, திரைப்படம்‌ எடுக்காமல்‌ இருக்கும்‌ தயாரிப்பாளர்கள்‌ பாதுகாப்பாக வாழவும்‌ உழைப்பதே எங்கள்‌ அணியின்‌ நோக்கம்‌...

உங்கள்‌ நல்லாதரவையும்‌, வாழ்த்துகளையும்‌ எதிர்பார்க்கிறோம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன்: அடுத்த ஸ்ரீரெட்டியா டிக்டாக் இலக்கியா?

பட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்ததாகவும், ஆனால் தன்னை பல இயக்குனர்கள் மற்றும் பெரிய நடிகர்கள் ஏமாற்றி விட்டதாகவும்

கொரோனா தடுப்பு மருந்து.. தன்னிடம் சோதிக்க அனுமதித்த அமெரிக்க பெண்மணி..!

இந்த மருந்தானது மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தாது என் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது வைரசை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகும்.

சென்னையில் 2வது நபருக்கு கொரோனா! உறுதி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பாடகி சின்மயிக்கு நன்றி கூறிய சூர்யா!

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும்

ஒரு பெண்ணுக்காக மோதிய இரண்டு கோஷ்டிகள்: நண்பனையே கொலை செய்து புதைத்த கும்பல்

கடலூர் அருகே டிக்டாக் வலையில் சிக்கிய இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது