தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் புதிய தொழில் நிறுவனங்கள்… முதல்வரின் அதிரடி!!!

 

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் வகையிலான புதிய ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் 14 நிறுவனங்கள் கையெழுத்து இட்டு இருக்கின்றன. கொரோனா நேரத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாகத் தமிழக திகழ்ந்து வருகிறது. அதனால் வீழ்ந்த பொருளாதாரத்தை சரிசெய்யவும் முடிந்தது. அந்த வகையில் நேற்று முதலமைச்சர் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மேலும் 14 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க இருக்கின்றன.

புதிய நிறுவனங்களின் முயற்சியால் தமிழகத்தில் மேலும் 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பினையும் சலுகைகளையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. இதன் விளைவாக தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து தமிழகத்தில் முதலீடுகளை செய்து வருகின்றன.

அந்த வகையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்பல்லோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உள்ளிட்ட 14 தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

இதில் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அமைக்கப்பட இருக்கிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரிலும், அப்பல்லோ டயர்ஸ் ஓரகடத்திலும் அமைய இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன. இந்த 14 நிறுவனங்களும் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க இருப்பதால் தமிழக இளைஞர்கள் 7 ஆயிரம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்த நிலையில் மேலும் 14 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஆண்டு மட்டும் 56 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழகம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருப்பதாக பிராஜக்ட் டுடே நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஜுலை-செப்டம்பர் வரையிலான 3 மாதங்களை கணக்கில் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இதுவே கடைசி அல்ல… கொரோனா குறித்து மேலும் அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளியிட்ட விஞ்ஞானி!!!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகத்தைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த வைரஸின் உருவாக்கத்தைப் பற்றி சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர்

கொரோனா மிஞ்சியதால் 3 வாரங்களுக்கு விடுமுறை… மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்!!!

கர்நாடக மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார்.

இங்கிலாந்துக்கான ஒரு நாள் தூதராகத் தேர்வு செய்யப்பட்ட 18 வயது இந்தியச் சிறுமி!!!

சர்வதேச பெண் குழந்தைகளின் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த கல்லூரி இளம்பெண் இங்கிலாந்து நாட்டுக்கான ஒருநாள் தூதராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

பாஜகவில் குஷ்பு: காங்கிரஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கடந்த சில வாரங்களாக பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வலம் வந்துகொண்டிருந்தன.

எல்லாத்துக்கும் சுந்தர் சி தான் காரணம்: காங்கிரஸ் பிரமுகர் ஆவேசம்

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, இன்று பாஜகவில் இணையவுள்ளார். இந்த நிலையில் குஷ்புவின் இந்த மாற்றம் குறித்து அரசியல் தலைவர்கள் கூறியதாவது: