close
Choose your channels

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் பத்து மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பெற்றோர்களுடனான கருத்து கணிப்புகளுக்கு பின் விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ 25.3.2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன்‌ அமலில்‌ இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, இந்த நோய்த்‌ தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது.

மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌, நோய்த்‌ தொற்று பரவல்‌ படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின்‌ சிறப்பான செயல்பாட்டினாலும்‌, பொதுமக்களின்‌ ஒத்துழைப்பினாலும்‌ தான்‌ நோய்‌
தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ தெரிவித்த கருத்துகளின்‌ அடிப்படையிலும்‌, மருத்துவ நிபுணர்கள்‌ மற்றும்‌ பொது சுகாதார வல்லுநர்களுடன்‌ நடத்தப்பட்ட
ஆலோசனைகளின்‌ அடிப்படையிலும்‌, மூத்த அமைச்சர்களுடன்‌ கலந்தாலோசித்தும்‌, பொங்கல்‌ விடுமுறைக்குப்‌ பின்னர்‌ 10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்‌ திறப்பது குறித்து பெற்றோர்களிடம்‌ 2021 ஜனவரி 6 முதல்‌ 8 வரை கருத்து கோரப்பட்டது. இக்கூட்டங்களில்‌ கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள்‌, பள்ளிகளைத்‌ திறக்க தங்கள்‌ இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள்‌ அறிக்கை அளித்துள்ளதை கருத்தில்‌ கொண்டும்‌, கல்வி பயில்வதில்‌ மாணாக்கர்களின்‌ வருங்கால நலனை கருத்தில்‌ கொண்டும்‌, வரும்‌ 19:12021ம்‌ தேதி முதல்‌ 10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்‌ பள்ளிகள்‌ திறக்கப்படும்‌.

பள்ளிகள்‌ திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல்‌ செயல்படவும்‌, அரசு வெளியிடும்‌ வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும்‌ செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும்‌ மாணவர்களுக்கான விடுதிகளும்‌ செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின்‌ மற்றும்‌ துத்தநாக மாத்திரைகள்‌ வழங்க சுகாதாரத்‌க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி, அரசு எடுத்து வரும்‌ கோவிட்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும்‌, ஆசிரியர்களும்‌ மற்றும்‌ மாணவர்களும்‌ முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு தமிழக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.