திருமண விருந்துக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர்

  • IndiaGlitz, [Saturday,May 19 2018]

புதுச்சேரியில் இருந்து திருமண பார்ட்டி ஒன்றுக்காக மதுபாட்டில் கடத்தி வந்த சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படை புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது கம்பன் நகர் அருகே ஒரு வாகனத்தில் 170 மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தையும் அதில் இருந்த மதுபாட்டில்களையும் கைப்பற்றி போலீசார் பின்னர் விசாரணையில் ஈடுபட்டபோது இந்த மது பாட்டில்களை கடத்தியது கோட்டக்குப்பம் என்ற பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் என்பதும் அவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியின் விருந்துக்காக மதுபாட்டில்களை கடத்தியதும் தெரியவந்தது. தமிழக டாஸ்மாக் கடைகளை விட புதுச்சேரியில் மதுபாட்டில்களின் விலை குறைவு என்பதால் அங்கிருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது.

மதுபாட்டில்களை கடத்தியது தன்னுடைய துறையை சேர்ந்தவர் என்று தெரிந்தும் சட்டப்படி நடவடிக்கை எடுத்த சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்து துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

More News

மகனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய அரவிந்தசாமி

கடந்த 90களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரும் 'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கும் அரவிந்தசாமி,

எடியூரப்பா-விராத் கோஹ்லி: பெங்களூரின் தலையெழுத்து இந்த 2 பேர்களின் கையில்?

சமீபத்தில் கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூராப்பா, இன்று மாலைக்குள் தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில்

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' கதை கிடைத்தது எங்கே? இயக்குனர் கூறிய தகவல்

ஒரு திரைப்படத்தில் மிகப்பெரிய ஹீரோ நாயகனாக நடித்திருந்தாலும், அந்த படத்தின் கதை சரியில்லை என்றால் தோல்வி அடையும் என்பது கோலிவுட் திரையுலகினர்களின் அனுபவமாக இருந்து வருகிறது.

மூன்றே ஷெட்யூல்: முடிகிறது விசுவாசம்!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

அமெரிக்க பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு: 10 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற மாகாணத்தில் உள்ள சாண்டே பே என்ற பள்ளியில் திடீரென மர்ம மனிதன் ஒருவன் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.