திரையரங்குகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

  • IndiaGlitz, [Saturday,August 21 2021]

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதித்துள்ள தமிழக அரசு தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக திரைஅரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நண்பரை கட்டிப்பிடித்து ஓணம் கொண்டாடும் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படங்கள்!

தனது நெருங்கிய நண்பரை கட்டிப்பிடித்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

சிரஞ்சீவியின் அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில்!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ், தெலுங்கில் 'தளபதி 67'? ஆச்சரியப்பட வைக்க்கும் அப்டேட்டுக்கள்!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன்

சின்னத்தம்பி குஷ்பூ ரிட்டர்ன்ஸ்.....! வைரலாகும் செல்பி புகைப்படம்.....!

நடிகை குஷ்பூ தனது லேட்டஸ்ட் செல்பி புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

விவாகரத்து வதந்திக்கு பண்ணை வீட்டின் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா!

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போகிறார் என சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அந்த வதந்திக்கு தனது பண்ணை வீடு ஒன்றின் மூலம் சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.