தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்!!!

 

கொரோனா நெருக்கடி நிலைமையில் இருந்து தமிழகம் தற்போது மீண்டு வருவதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்றும் இதுவரை மருத்துவமனைகளில் 49 ஆயிரத்து 203 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் 53 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்ற தகவலையும் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா பயத்தோடு வீட்டில் இருக்கும் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளன. அந்த வகையில் இணையதளம் மூலம் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு இ-சஞ்சீவனி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக தனி 118 ஆம்புலன்ஸ் சேவையையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்து இருக்கிறார். கொரோனா அறிகுறிகளோடு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்க அம்மா கோவிட்-19 திட்டமும் அமல்படுத்தப் பட்டு இருக்கிறது.

மேலும், கொரோனாவிற்குத் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பதற்கு வசதியாகத் தமிழகத்தில் அதிகளவில் அரசு மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள் என்றும் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. அதைத்தவிர மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் வலுவாக உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்வதும் மற்றொரு சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை முறையும் தமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் முன்மாதிரி மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது.

இதைத்தவிர தனித்த வகையில் தமிழகம் சில முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறியின் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை மேற்கொள்வது, நோயாளிகளோடு தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, அதிகம் கொரோனா பாதித்த நபர்களின் பகுதிகளை தீவிரக் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றுவது, கொரோனா அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்த மையங்களை உருவாக்கி அதில் 300 நபர்களுக்கு ஒரு அதிகாரியையும் பாதுகாப்புக்காக பணி அமர்த்துவது எனப் பல வழிமுறைகளையும் தமிழகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் தரமான சிகிச்சை மற்றும் மருத்துவ நெறிமுறைகளினால் தற்போது குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்திய அளவில் கொரோனா பரிசோதனையை அதிகம் மேற்கொள்ளும் மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதற்காக இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் 135 கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அதில் 61 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 74 தனியார் பரிசோதனை மையங்கள் இருப்பதாக அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் இத்தகைய தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் தொடர்ந்து 7 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000 க்கும் கீழாக குறைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 12 ஆகவும் குறைந்துள்ளது. தமிழகத்தில் 10 ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு குறைவாக பதிவாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தகக்து. இதனால் கொரோனா நெருக்கடியில் இருந்து தமிழகம் இயல்பு நிலைமைக்கு திரும்புவதும் தொடங்கியிருக்கிறது.

More News

பூமியை நோக்கி 38 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நெருங்கும் ராட்சதகல்!!! பாதிப்பு இருக்குமா???

பூமியை நோக்கி 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு ராட்சத கல் வந்து கொண்டிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல: வைரமுத்து

நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதன் பரபரப்பு நீங்காத நிலையில்

படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம்: மதுரை மாணவி தற்கொலை குறித்து பிரபல இயக்குனர்!

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் நீட் தேர்வு பயம் காரணமாக இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்ட தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்போன் அழைப்பை எடுக்காத காதலி: சோகத்தில் 3வது மாடியில் இருந்து குதித்த சென்னை வாலிபர்!

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் காதலை முறித்துக் கொண்டதால்

கொரோனாவை குணமாக்கும் கருப்புத்தங்கம்: வைரமுத்து!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்றும் கூட தமிழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும்