ஓபிஎஸ் வீட்டின் முன் பேசிய ஜெயலலிதா ஆவி. சாமியார் ஏற்படுத்திய பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 28 2017]

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது ஆன்மாவின் ஆணைக்கேற்ப அனைத்து உண்மைகளையும் கூறியதாக சென்னை மெரீனாவில் மெளனத்தை ஓபிஎஸ் எப்போது கலைத்தரோ அதும்முதல் பலர் ஜெயலலிதாவின் ஆவி, ஆன்மா பேசியதாக தங்கள் கருத்துக்களை (கதைகளை) கூறி வருகின்றனர். இன்று கூட பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி முதல்வர் ஆவதுதான் ஜெயலலிதாவின் ஆவியின் விருப்பம்' என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்நிலையில் திருவாரூரில் உள்ள சாமியார் ஒருவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி இறங்கியதாக கூறிய விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஓபிஎஸ் அவர்களின் சென்னை வீட்டிற்கு வந்த அந்த சாமியார் நிருபர்கள் முன்னிலையில் திடீரென ஜெயலலிதா பேசியது போலவே பேசினார். அவர் பேசியதாவது:

நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன். ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். .ஓபிஎஸ்க்கு உறுதுணையாக இருப்பேன். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்தியமானவர். அவருக்கு உறுதுணையாக இருப்பேன்.

சதிகாரர்கள் வலையில் சிக்கக்கூடாது சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது. இவ்வாறு அந்த சாமியார் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதுப் போல் பேசினார்.

ஒருபக்கம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் விலகாத நிலையில் இன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் ஆவி பேசுவதாக ஆளாளுக்கு கூறி வருவதை பொதுமக்கள் அமைதியுடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

More News

துரைமுருகனை சிரிக்க வைத்த ஜெயலலிதா- ஓபிஎஸ் சொல்லும் சுவாரஸ்யம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென அவரை சசிகலா ராஜினாமா செய்ய வற்புறுத்தினார் என்பது தெரிந்ததே

அர்னாப் தலைமையிலான சேனலில் இணையும் தமிழக செய்தியாளர்

டைம்ஸ் ஆப் இந்தியா புகழ் அர்னாப் கோஸ்வாமி 'ரிபப்ளிக்' என்ற ஆங்கில தேசிய சேனலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த சேனலில் தமிழ் செய்தி சேனல் தந்திடிவியின் முன்னணி செய்தி ஆசிரியரான ஹரிஹரன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜனாதிபதியுடன் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் சந்திப்பு. கோரிக்கைகள் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா ஆதரவு அணி 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்து கொண்டாலும், ஓபிஎஸ் அணிக்கு 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் 12 எம்பிக்களின் ஆதரவு உள்ளதால் வலுவாக அணியாக காணப்படுகிறது.

விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க பணம் கட்டி டோக்கன் வாங்கும் தொண்டர்கள்

பிரபல நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகின்றார்.

பாலா-ஜோதிகா படத்தின் டைட்டில் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் பிரபல நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.