close
Choose your channels

17 வயது பள்ளி மாணவனுடன் குடித்தனம் நடத்திய ஆசிரியை.. போக்சோ சட்டத்தில் கைது.!

Friday, December 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

17 வயது பள்ளி மாணவனை காதலித்து குடித்தனம் நடத்திய 28 வயது ஆங்கில ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அருகே தாழம்பூர் என்ற பகுதியில் ஆங்கில ஆசிரியராக 28 வயது ஹெப்சிகா என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அதே பள்ளியில் 11-வது வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் இந்த விவகாரம் மாணவரின் பெற்றோருக்கு தெரிந்ததை அடுத்து ஆசிரியையை அவர்கள் கண்டித்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து மாணவனுடன் பழக மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்த ஆசிரியை, பள்ளிக்கு வேலைக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் திடீரென மாணவனை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்த நிலையில் தனிப்படை அமைத்து மாணவனை தேடி வந்தனர்

விசாரணையில் ஆசிரியை ஹெப்சிகா மாணவனை கோவை அழைத்துச் சென்று குடித்தனம் நடத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து மாணவனை மீட்ட காவல்துறையினர் ஆசிரியை ஹெப்சிகா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment