'காத்துவாக்குல ரெண்டு காதல்': 2 பெண்களுடன் ஒரே நாளில் திருமண செய்த இளைஞர்..!

  • IndiaGlitz, [Saturday,March 11 2023]

தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் காத்து வாக்குல ரெண்டு காதல் என நெட்டிசன்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கொத்தகுடேம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டிபாபு என்ற இளைஞர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் படிக்கும் கல்லூரி மாணவி ஸ்வர்ண குமாரி என்பவரை காதலித்தார். பின்னர் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்து தனித்தனியாக வாழ்ந்தனர்.

இந்த நிலையில் சுனிதா என்ற பெண்ணை காதலித்த சட்டிபாபு அவருடன் நெருக்கமாக பழகியதை அடுத்து சுனிதாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சட்டிபாபுவின் முதல் காதல் குறித்து சுனிதா தெரிந்து கொண்டார்.. இதனை அடுத்து காதலியான ஸ்வர்ணகுமாரியை தன்னுடனே அழைத்து வந்ததை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சட்டிபாபுவின் பெற்றோர் இரண்டு காதலையும் ஏற்றுக்கொண்டதை அடுத்து ஒரே நாளில் சட்டிபாபுவுக்கு இரண்டு பெண்களுடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இரண்டு பெண்களுடன் சட்டிபாபுவுக்கு திருமணம் என்று அழைப்பிதழ்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒரே நாளில் இரண்டு பெண்களை திருமணம் செய்தால் சட்டிபாபு கைது செய்யப்படலாம் என்ற செய்தியும் பரவியது.

இதனை அடுத்து இரவோடு இரவாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சட்டிபாபு ஸ்வர்னகுமாரி, சுனிதா ஆகிய இருவருக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன்பே இரண்டு பெண்களை காதலித்து இரண்டு பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சட்டிபாபு ஒரே நேரத்தில் இருவரையும் பெற்றோர்கள் முன்னிலை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சட்டப்படி சாத்தியமா? சட்டிபாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

More News

டிஜே பிளாக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி.. மாகாபா, ப்ரியங்கா நேரில் வாழ்த்து..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் டிஜே பிளாக்கின் பணி மிகவும் சிறந்தது என்பதும் அவருக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன என்பது

விஜய்யின் 'லியோ' படத்தின் மாஸ் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட வீடியோ..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் 'லியோ' படத்தின் தொடர் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று

'அவர் பாட்ஷா மாதிரி, அவருக்கு இன்னொரு முகம் இருக்கு: தமிழக அமைச்சர் குறித்து ரஜினிகாந்த்..!

அவர் பாட்ஷா மாதிரி, அவருக்கு இன்னொரு முகம் இருக்குது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அமைச்சர் ஒருவர் குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெயம் ரவியின் 'அகிலன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியம்..!

 ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில கலவையான விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

'கொடுத்து வச்சது அந்த ரோஸ் தான்: ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்..!

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவர் பூக்களை கைகளில் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஜாலியான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன