தேசிய அளவிலான பளூதூக்கும் போட்டியில் தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

விளையாட்டு துறையில் சாதனை படைத்த சடகோபன் ரமேஷ், ரித்திகாசிங் போன்ற பலர் சினிமா துறையில் நுழைந்தது போல், சினிமாத்துறையில் உள்ள ஒரு நடிகை விளையாட்டு துறைக்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அவர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றுள்ளார். அவர் மணிரத்னம் இயக்கத்தில் 'ஓகே கண்மணி' படத்தில் நடித்தவரும் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளருமான ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ரம்யா, தற்போது தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இதுகுறித்து ரம்யா கூறியதாவது,

பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி, தற்போது 35 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ளேன்.

போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளேன்' என்று ரம்யா கூறியுள்ளார்.

More News

மீண்டும் இணைந்த சிம்பு-அனிருத்

பல்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவராகிய சிம்பு, சமீபத்தில் சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

நடிகர் சங்கத்தின் கோரிக்கைக்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் பதில்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் சில மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகை மட்டுமின்றி கோலிவுட் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

ரஜினி-ரஞ்சித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல் புரிந்த நிலையில் இந்த சூப்பர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது...

முதுகெலும்பு இல்லாதவர் என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தின் மூலம் சொற்போர் நடந்து வருவதை அனைவரும் கவனித்து கொண்டுதான் வருகின்றனர்...

ஜோதிகா கேரக்டரை ஏற்கும் அருள்நிதி

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கவுள்ள அடுத்த படமான 'பிருந்தாவனம்' படத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் அருள்நிதி காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்