சீரியல் நடிகை தற்கொலை: 2 காதலர்கள் கைது, 3வது காதலர் தலைமறைவு!

  • IndiaGlitz, [Tuesday,September 15 2020]

தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் அடுத்தடுத்து மூன்று காதலர்களால் ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.

ஐதராபாத்தை சேர்ந்த டிவி நடிகை ஸ்ராவனி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சாய்ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். ஸ்ராவனிக்காக சாய்ரெட்டி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஸ்ராவனியை திருமணம் செய்து வைக்கவும் அவரது பெற்றோர்கள் உறுதிமொழி கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் திடீரென சாய்ரெட்டியுடன் ஏற்பட்ட உறவில் முறிவு ஏற்பட்டதை அடுத்து 2017 ஆம் ஆண்டு டிக் டாக் பிரபலமான தேவராஜ் ரெட்டி என்பவருடன் ஸ்ராவனிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும்போது ஸ்ராவனியை ஆபாசமாக தேவராஜ் ரெட்டி வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை காட்டி ஸ்ராவனியை மிரட்டி பணம் பறித்ததாகவும், அதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் கடந்த ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவரை ஸ்ராவனி சந்தித்து உள்ளார். அவரை கதாநாயகியாக்க போவதாக ஆசை வார்த்தை கூறிய அசோக்குமார் அதன் பின்னர் அவரை பயன்படுத்திவிட்டு கைவிட்டதாகவும் தெரிகிறது

இதனால் அடுத்தடுத்து மூன்று காதலர்களால் ஏமாற்றப்பட்டதாலும், ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டப்பட்டதாலும், ஏற்பட்ட மன உளைச்சலில் ஸ்ராவனி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ராவனி பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் இரண்டு காதலர்களான சாய்ரெட்டி மற்றும் தேவராஜ் ரெட்டி ஆகியோர்களை போலீசார் கைது செய்தனர் என்றும், தலைமறைவாக உள்ள அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது


 

More News

அம்மாவின் பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடிய நயன்தாரா: வைரலாகும் புகைப்படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவாவில் சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன என்பதும் தெரிந்ததே

ரியோவை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு நடிகர்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகளை

எழுந்து அமர்ந்தார் எஸ்.பி.பி: நல்ல செய்தி சொன்ன எஸ்.பி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே

அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும்,

அக்சராஹாசனின் அடுத்த பட டைட்டில் இதுதான்: அதிரடி அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன் ஏற்கனவே அமிதாப், தனுஷ் நடித்த 'ஷமிதாப்', அஜித் நடித்த 'விவேகம்', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' நடித்துள்ளார்