சின்னத்திரையுலகின் அடுத்த ஜோடி: இன்ஸ்டாவில் அறிவிக்கப்பட்ட க்யூட் காதல்!

  • IndiaGlitz, [Saturday,December 04 2021]

தமிழ் திரையுலகில் அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, பிரசன்னா - சினேகா உட்பட பல நட்சத்திரங்கள் நிஜ வாழ்விலும் ஜோடிகள் ஆளாகியுள்ளனர் என்பது தெரிந்ததே. அதேபோல் சின்னத்திரை உலகிலும் ஜோடியாக நடித்த நட்சத்திரங்கள் நிஜ வாழ்விலும் ஜோடி ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’திருமணம்’ சீரியல் மூலம் புகழ்பெற்ற ஸ்ரேயா- சித்து ஜோடி நீண்டடகாலமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதேபோல் ’பூவே பூச்சூடவா’, ‘அபி டெய்லர்’ போன்ற சீரியல்களில் ஜோடியாக நடித்த மதன் - ரேஷ்மா ஜோடி திருமணம் செய்து கொண்டனர். செம்பருத்தி சீரியலில் நடித்த ஷபானா சமீபத்தில் ஆர்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், ‘ராஜா ராணி’ சீரியலின் நட்சத்திரங்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடியும் நிஜ வாழ்வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது கலர்ஸ் டிவியில் ’அம்மன்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்து வரும் அமல்ஜித் மற்றும் பவித்ரா ஆகியோர் தங்களது காதலை வெளிப்படையாக முதல்முறையாக தெரிவித்துள்ளனர். ‘என்னுள் பாதி’ என அமல்ஜித் தனது இன்ஸ்டாகிராமில் பவித்ராவின் புகைப்படத்தை பதிவு செய்து காதலை க்யூட்டாக வெளிப்படுத்திய நிலையில் இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

திரையுலகில் விஜய்யின் 29 வருடங்கள்: காமன் டிபி போஸ்டர் வைரல்!

தமிழ் திரையுலகில் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிய 29 வருடங்கள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் காமன் டிபி போஸ்டரை வெளியீடு கொண்டாடி வருகின்றனர் 

காதலரிடம் ஏமாந்தாரா? போலீஸில் புகார் அளித்த பிக்பாஸ் ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி தன்னுடைய காதலர் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு வெற்றிக்குப் பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் சிம்பு!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த “மாநாடு“ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றுள்ளது.

லண்டனில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா… ஒமைக்ரான் பாதிப்பா?

லண்டனில் இருந்து நேற்று (3.12.2021) அதிகாலை சென்னை வந்த ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது.