மாஸ் நடிகருக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

தெலுங்கு திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலக மாஸ் நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன் என்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திரையுலகைச் சேர்ந்த பலரையும் பாதித்த கொரோனா தற்போது அல்லு அர்ஜுனையும் தாக்கியுள்ளது.

இதுகுறித்து அல்லு அர்ஜூன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதை அடுத்து நான் வழிகாட்டு நெறிமுறையின்படி வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும் அனைவரும் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் எனது ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் மிகவும் நலமுடன் தான் இருக்கிறேன், எனக்கு எந்தவித ஆபத்தும் இல்லை’ என்று கூறியுள்ளார். அல்லு அர்ஜூனனுக்கு கொரோனா பாதிப்பு என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் சோகமாக இருந்தாலும் அவர் நலமுடன் இருப்பதை அறிந்து ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
 

More News

நகைகளை அடகு வைத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவிய கோவை தம்பதி!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தம்பதி சென்றுள்ளனர்.

அசாமில் கடும் நிலநடுக்கம்… இந்தியாவில் மேலும் ஒரு அதிர்ச்சி!

அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டு உள்ளார்.

நடிகராகிறாரா ரம்யா பாண்டியனின் சகோதரர்?

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியனின் சகோதரர் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை

பொய் சொன்னால் அறை நிச்சயம்… நடிகர் சித்தார்த்தின் இந்த எச்சரிக்கை யாருக்கு?

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவே திண்டாடி வருகிறது.

தனுஷை அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியான 'கர்ணன்' நாயகி!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.