close
Choose your channels

4வது திருமணம் செய்ய திட்டமிட்ட பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த 3வது மனைவி?

Monday, January 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான்காவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள பிரபல நடிகரை அவரது மூன்றாவது மனைவி கொலை செய்வதாக மிரட்டி உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய மகேஷ்பாபுவின் சகோதரர் நரேஷ் என்பவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்த நரேஷ், மூன்றாவது மனைவி ரம்யாவை விவாகரத்து செய்துவிட்டு பவித்ரா என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

நடிகை பவித்ரா ’கௌரவம்’ ’அயோக்யா’, க/பெ ரணசிங்கம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் என்பதும் இவருக்கும் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தில் நடிகர் நரேஷ் மற்றும் நடிகை பவித்ரா இருவரும் லிப்ட்லாக் செய்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் நரேஷ் காவல் துறையில் தனது 3வது மனைவி மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை மூன்றாவது மனைவி ரம்யா கொலை செய்யப் போவதாக மிரட்டி உள்ளதாகவும் தன்னை திருமணம் செய்ததிலிருந்து தொந்தரவு பெற்று வருவதாகவும் 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெலுங்கானா நீதிமன்றத்தில் ரம்யாவிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்று தருமாறு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.