மனித உறவுகளை நம்புபவர்.. சமுத்திரக்கனிக்கு வாழ்த்து தெரிவித்த அண்டை மாநில சூப்பர் ஸ்டார்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்டை மாநில சூப்பர் ஸ்டார் நடிகர் சமுத்திரகனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செய்துள்ள பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மற்றும் அரசியல்வாதியான பவன் கல்யாண் சமுத்திரக்கனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மிகத் திறமையான இயக்குனர், எழுத்தாளர் நடிகர் திரு சமுத்திரக்கனி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்பான திரு சமுத்திரகனி மனித உறவுகளை நம்புபவர். அதனால்தான் அவரது படங்களில் அதன் கருத்துக்கள் காணப்படுகின்றன. சாதியற்ற சமுதாயத்தை விரும்புபவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகராகவும் இயக்குனர் ஆகவும் தனக்கென தனி அங்கீகாரம் பெற்றவர்.
நடிகராக தேசிய அளவில் விருது பெற்றார். என்னுடைய ’பீம்லா நாயக்’ படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது இவரது இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகளை பெற மனதார வாழ்த்துகிறேன். மூகாம்பிகை தேவியின் பக்தரான திரு சமுத்திரக்கனிக்கு அந்த ஜெகத்காரணி அருள் எப்போதும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு பவன் கல்யாண் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments